Create Free Blog | Random Blog »   Report Abuse | Login   

 

தமிழ்த் தென்றல்

ஆக்கபூர்வமான அலசல்கள், விமர்சனங்கள், செய்திகள் மற்றும் இலக்கியம்

உடல்நலம் பேணுதல் குறித்த ஒரு சிறுகுறிப்பு

January28
உடல்நலம் பேணுதல் குறித்த ஒரு சிறுகுறிப்பு
 
நமது நல்ல ஆரோக்கியமான உடல் நலனுக்கு கனிகள் மிகவும் அவசியம். பழச்சாறுகள் 100 விழுக்காடு வரை நமக்கு தேவையான அனைத்து சத்துகளையும் தருகின்றன.
 
  1. பச்சைக் கனிகளில் மினரல்கள் மற்றும் வைட்டமின் பி அடங்கியுள்ளது. இது உடல் குருதி ஓட்டத்திற்கு மிகவும் நல்லது.
  2. சிவப்பு கனிகள் உடல்நலத்திற்கு எந்த தீங்கும் ஏற்படாதவாறு காத்து நிற்கிறது. தக்காளி, தர்பூசிணி மற்றும் strawberry  போன்றவை இதில் அடங்கும்.
  3. மஞ்சள் நிறக் கனிகள் கண்புரை வராது காத்து நிற்கிறது. மஞ்சச் சோளம், அன்னாசி மற்றும் ஆரஞ்சுப் பழங்கள் இதில் அடங்கும்.
பழச் சாறுகளின் சில பழங்கள்:
 
  1. ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டால் புற்று நோய் வருவதை தடுத்துக் கொள்ளலாம்.
  2. காரட், சர்க்கரை வள்ளி போன்றவை கண்களுக்கும் நல்லது. இதில் வைட்டமின் ஏ நிறைய உண்டு.
  3. வெள்ளை மற்றும் பச்சை நிறக் கனிகளில் தாதுச் சத்துக்கள் நிறைய உண்டு. வெங்காயம் மற்றும் பூண்டு இதில் அடங்கும்.  பாக்டீரியா மற்றும் காளான் தீங்கு இல்லாமல் இது நம்மைக் காக்கும்
  4. சிவப்பு மற்றும் நீல நிற கனிகள் ரத்த ஓட்டம் மற்றும் இருதயத்திற்கு மிக்க நல்லது. ஆப்பிள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

[நன்றி: தோழி நிர்மலா மேரி ஜேம்ஸ்/காக்னிசன்ட்] 

Share SocialTwist Tell-a-Friend 

முதல் தகவல் அறிக்கை (FIR) குறித்த ஒரு விழிப்புணர்வு பதிவு

January28
முதல் தகவல் அறிக்கை (FIR) குறித்த  ஒரு விழிப்புணர்வு பதிவு
 
ஒரு குற்றம் குறித்து நாம் காவல் நிலையத்தில் சென்று அதனைப் பதிவு செய்யும் போது அந்த பதிவினை ’முதல் தகவல் அறிக்கை’ (FIR) என்று அழைப்பர். இதனை ஆதாரமாகக் கொண்டுதான் காவல் துறை மேற்பட்ட விசாரணையைத் தொடக்குவர். ஆனால் இந்த அறிக்கையை பதிவு செய்ய காவலர்கள் மறுப்பதாக ஊடகங்கள் வாயிலாக பல செய்திகளை நாம் அன்றாடம் காண்கிறோம். இதற்கு தீர்வாக தம்மிடம் கொண்டுவரப்படும் எல்லாப் புகார்களும் ‘முதல் தகவல் அறிக்கையாக’ பதிவு செய்யப் பட வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் அண்மையில் ஒரு சட்ட திருத்தும் கொண்டு வந்துள்ளது. [செய்தி ஆதாரம்: ரெடிப்ப்]
 
இதனிடையே இந்த முதல் தகவல் அறிக்கை குறித்து மக்களிடையே இன்னும் சிறந்த விழிப்புணர்வு கொண்டு வர வைப்பது வலைப் பதிவர்களின் கடமையும் ஆகும். நான் ஒரு இணையத்தளத்தில் இது குறித்து ஒரு தெளிவான ஒரு கோப்பினைக் கண்டேன். அதனை இங்கு அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதன் முகவரி இங்கே: http://www.humanrightsinitiative.org/publications/police/fir.pdf
Share SocialTwist Tell-a-Friend 

சித்திரை முதல் தினத்தின் அருமை பெருமைக்கு இன்னும் ஒரு தெள்ளத் தெளிவான சான்று

January28
சித்திரை முதல் தினத்தின் அருமை பெருமைக்கு இன்னும் ஒரு தெள்ளத் தெளிவான சான்று
 
அரசியல் அழுக்காறு காரணமாக, தமிழ்ப் புத்தாண்டு சித்திரையிலிருந்து தைக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  ஆனால் ஆதவனை கைகளால் மறைக்க முடியாது என்பது போல சித்திரை முதல் நாளின் மதிப்பினை சாதாரண அரசியல்வாதிகள் குறைத்து மதிப்பிட முடியாது என்று நான் அண்மையில் கண்ட ஒரு சுவரொட்டி அறிவிப்பு உணர்த்தியது.
 
தமிழகத்தில் ஒரு பிரபலமான அரசியல் கட்சி ஏப்ரல் 14 அன்று  டாக்டர்  அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினத்தினை ஒட்டி மாநாடுகளை ஏற்பாடு செய்துள்ளது. அது போல இணையத்தில் இன்னும் தேடும் போது கண்ட ஒரு செய்தி — 2008 ம் ஆண்டு முதல் நடுவண் அரசு ஏப்ரல் 14 தேதியை விடுமுறையாக அறிவித்துள்ளது. [செய்தி ஆதாரம்: ரெடிப்ப்]
Share SocialTwist Tell-a-Friend 

சிங்காரச் சென்னையின் மாசு நிலவரம் குறித்து மா. சு. இன்னும் கொஞ்சம் சுதாரித்து செயல்படுவாரா?

January28
சிங்காரச் சென்னையின் மாசு நிலவரம் குறித்து மா. சு. இன்னும் கொஞ்சம் சுதாரித்து செயல்படுவாரா?
 
தமிழகத்தின் தலைநகரமான சென்னை நகரினை (குறிப்பாக மெரினா கடற்கரை சார்ந்த காமராஜர் சாலை) கோடிகள் கொட்டி அழகுபடுத்தும் சென்னை மாநகராட்சி நகரின் மற்ற இடங்களில் காணப்படும் மற்ற வகை மாசுக்களை அகற்ற ஆவன செய்யுமா?
 
  1. பள்ளி, கல்லூரி, மருத்துவமனை அருகாமையில் எப்போதும் ஒலிபெருக்கி, ஆரன் பயன்படுத்தக் கூடாது என்பது சட்டம். ஆனால் பல இடங்களில் இந்த இடங்களிலும் சப்த மாசு காது ஜவ்வினை பிய்த்து எறிகிறது.
  2. சென்னை நகரின் சுவரொட்டிகளில் கண்ட மாதிரி அழுக்காறு நிறைந்த விளம்பரங்கள் கூடாது என்று ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அண்ணா சாலை, எழும்பூர் பகுதிகளில் பலான திரைப்படம் பற்றிய விளம்பர சுவரொட்டிகள் மன மாசினை அதிகரிக்கின்றன.
Share SocialTwist Tell-a-Friend 

ஒரு வியப்பான திருமண அழைப்பு-வாழ்த்து பலகை

January28
ஒரு வியப்பான திருமண அழைப்பு-வாழ்த்து பலகை
 
நேற்று மாலை சென்னை பள்ளிகரணை அருகே பேருந்தில் செல்லும் போது நான் கண்ட ஒரு திருமண அழைப்பு-வாழ்த்து பலகையில் கண்ட மணமக்கள் பெயர்கள் சிறிது புதுமையாக இருந்தன:
 

மணமகன்: சௌ கமலக்கண்ணன்
மணமகள்: சி பாரதி
 
பொதுவாக மணமகளுக்குத் தான் சௌ என்றும் (சௌபாக்கியவதி என்பதன் சுருக்கமாக) மணமகனுக்கு சி என்றும் (சிரஞ்சீவி என்பதன் சுருக்கமாக) போடுவார்கள். எது எப்படியோ, இல்லற வாழ்வின் தொடக்கத்தினை புதுமை படைத்து தொடங்கும் அந்த தம்பதிக்கு நாம் நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.

“நடு Center க்கு போங்கப்பா”

January28
 ”நடு Center க்கு போங்கப்பா”
 
நேற்று மாநகரப் பேருந்தின் ஒரு கூட்டம் நிறைந்த பேருந்தில் பயணம் செய்ய நேர்ந்தது. நடத்துனர் அருகில் நின்று கொண்டிருந்த ஒருவர் உள்ள நின்று கொண்டு இருந்தவர்களை உள்ள செல்ல கேட்டுக் கொண்டிருந்தார். பஸ் நடுவில் இடம் உள்ளது அதனால் பாதையை அடைத்துக் கொண்டு நிற்க வேண்டாம் என்பது அவரது கூக்குரலின் குறிக்கோள். ஆனால் அவர் சொன்ன விதம் சற்று புதுமையாக இருந்தது.
 
 ”நடு Center க்கு போங்கப்பா” என்று கூறிக் கொண்டிருந்தார். நடு என்றால் ஆங்கிலத்தில் center என்று பொருள். ஆங்கிலம் மற்றும் தமிழ் பின்னிப் பிணைந்து ஒரு எழில்மிகு வழிகாட்டுதலாக அமைந்த அவரது குரல் பேருந்தில் அனைவர் முகத்திலும் ஒரு வியப்பு கலந்த புன்னகைக் கீற்றினை தவழ விட்டது என்றால் அது மிகையாகாது.
Share SocialTwist Tell-a-Friend 

இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்

January11

இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் 

பொங்கல் திருநாளில் உள்ளம் எல்லாம் உற்சாகப் பொங்கல் பொங்க உளங்கனிந்த இனிய
தைப் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்

திங்கள் (புதிய வணிக வார தொடக்கம்) காலை புன்னகை மட்டும் ஊக்கப் பதிவு

January11
திங்கள் (புதிய வணிக வார தொடக்கம்) காலை புன்னகை மட்டும் ஊக்கப் பதிவு

Lord, give us grace and strength to preserve.  Give us courage and joy and the quiet mind.

è Robert Louis Stevenson 

[நன்றி: தோழி நிர்மலா மேரி ஜேம்ஸ்/காக்னிசன்ட்] 

அஹோபிலம்.com நவீன பரிபூரணமான இலவச திருமண சேவை இணையதளம்

January10

அஹோபிலம்.com  நவீன பரிபூரணமான இலவச திருமண சேவை இணையதளம்

புற்றீசல் போலப் பரவியுள்ள பற்பல திருமண சேவை நிறுவனங்கள் தங்களுக்கு கிடைக்கும் ஆதாயம்/லாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ள இந்த காலக் கட்டத்தில், மக்கள் சேவை மட்டுமே கருத்தில் கொண்டு, அனைத்து சேவைகளும் இலவசமாக அளிக்கும் இணையதளம் அஹோபிலம்.com  வைதீகம் குழுமம் அவர்களின் திருமண சேவைப் பிரிவு. இப்போது நவீன தொழில்நுட்பத்துடன் முற்றிலும் புதிய வடிவம் பெற்றுள்ளது:

இணையதள முகவரி: http://www.ahobilam.com/Ahobilam-Matrimonial/Default.aspx

எழிலும் எளிமையும் இணைந்து இருமனங்கள் திருமணம் என்னும் நல்லதொரு திருவிழாவில் இணைய நமக்கு உதவ காத்திருக்கும் இந்த இணையதளத்தின் சேவைகளைப் பயன்படுத்தி அவர்களுக்கு நல்லூக்கமும் ஆதரவும் கொடுப்போம்.

Share SocialTwist Tell-a-Friend 

சென்னை வேளச்சேரி விஜயநகர் சாலை சந்திப்பில் தவறான வழிகாட்டி

January10

சென்னை வேளச்சேரி விஜயநகர் சாலை சந்திப்பில் தவறான வழிகாட்டி

சென்னை வேளச்சேரி விஜயநகர் சாலை சந்திப்பில் பாரத ஸ்டேட் வங்கிக்கும் தண்டபாணி மின்னணு கடைக்கும் ஒரு நேர்க்கோட்டில் அமைந்தவாரும், சாலை நடுவண் பிரிவு சுவரில் அமைக்கப் பட்டிருப்பும் ‘U  திருப்பம் தடுக்கப்பட்டுள்ளது’ என்ற அறிவிப்பில், சித்திரம் கூறும் செய்தி “U  திருப்பம் செய்யலாம்” என்பது. ‘U’ வின் குறுக்கே போட வேண்டிய குறுக்குக் கோட்டினை மறந்துவிட்டிருக்கின்றனர்.

இதைப் பற்றிய ஒரு கவன ஈர்ப்பு மடல் சென்னை மாநகராட்சியிடம் தற்போது நிலுவையில் உள்ளது. இந்த சாலைப் பகுதியை பயன்படுத்தும் மக்கள் இதை கவனத்தில் கொண்டு அங்கிருக்கும் காவலரிடம் தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்த்தல் நன்மை பயக்கும்.

« Older Entries